Showing posts with label பாகவத மேளா. Show all posts
Showing posts with label பாகவத மேளா. Show all posts

Wednesday, 9 July 2025

மெலட்டூர் பாகவத மேளா ஓர் அறிமுகம் - பரதம் ஆர். மகாலிங்கம், முரளி ரங்கராஜன்


‘பாகவத மேளா’ செவ்வியல் நடனம், இசை உதவியுடன் நிகழும் மேடைக்கலை வடிவம். தொடங்கியது முதல் இப்போது வரை இக்கலை ஆலயம் சார்ந்து இயங்கி வருகின்றது. வழக்கிலுள்ள செவ்வியல் கலைவடிவங்களில் இல்லாத இசைக்கோர்வை, நடன அமைப்பு, தனித்துவமான ராக நிரவல்கள் எல்லாம் இணைந்து பாகவதமேளா என்னும் கலைவடிவை தனிச்சிறப்புள்ளதாக ஆக்குகின்றது. நாடகமும் நடனமும் இணைந்த இந்த கலைவடிவம் ஐந்து நூற்றாண்டுகளுக்கு மேலாக நிகழ்ந்து வருகிறது. இக்கலைக்கான அனைத்துப்பங்களிப்புகளும், அதாவது நடனம், நடிப்பு, இசை இப்படியாக இவை அனைத்தும் இதுநாள்வரை ஆண்களால் மட்டுமே செய்யப்படுகின்றது. முற்காலத்தில் ஆண்கள் நடனமாடுவதற்கு இருந்த மிகச்சில வாய்ப்புகளில் இதுவும் ஒன்று என்பதையும் கவனத்தில் கொள்ளலாம். தொழில்முறைக்கலையாக இல்லாமல் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர் மீதான பக்தியின் வெளிப்பாடாகவே பாகவத மேளா இன்றளவும் நிகழ்த்தப்படுகின்றது. 

கலையின் தனித்தன்மை எதுவோ அதை பெருமிதத்தோடு வெளிப்படுத்துங்கள் - பாகவதமேளா கலைஞர்களுடன் ஓர் உரையாடல்

பரதம் ஆர்.மகாலிங்கம்
குருகு இதழ் ஆரம்பித்த பிறகு வெவ்வேறு நிகழ்த்துக்கலை வடிவங்களை பார்க்கவும், ஆளுமைகளை சந்திக்கவும் முடிவு செய்தோம். ஒரு யட்சகானா கலைஞரை சந்திக்க 2000 கிலோ மீட்டர் பயணம் செய்வது சற்று கிறுக்குத்தனமாக தோன்றினாலும் இலக்கிய விழாக்களில் நண்பர்களை சந்திக்கும் போது ஒருவராவது அந்த நேர்காணல் பற்றி பேசாமல் இருந்ததில்லை. நண்பர் அழகிய மணவாளன் உடனான கேரளப் பயணங்களில் கதகளி பார்ப்பதும், ஆளுமைகளை சந்திப்பதும் எப்போதும் நிறைவு தரும் விஷயங்கள். கூடியாட்டமும் சாக்கியார் கூத்தும் அப்படித்தான் குருகு இதழில் பதிவாகின.

தேவ தேவா இதுவே சமயம் அய்யா - அனங்கன்

தமிழ் நாட்டின் மூலையில் உள்ள ஒரு கிராமத்தில் இரவு முழுவதும் தெலுங்கு பத்யங்கள் (தெலுங்கு மொழி செய்யுள்கள்) பாடி தெலுங்கு வசனம் பேசி இசை நாடகங்கள், ஐந்து நாட்கள் ஒரு திருவிழா போல நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்குச் சற்று கடினமான விஷயமாக இருக்கலாம். ஆனால் ‘பாகவத மேளா’ என்ற நாட்டிய நாடகம் அவ்வாறு 300 வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்து மெலட்டூர் என்ற கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வருடமும் (2025) வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. 

பாகவத சேவையும் பிரஹலாத சரிதமும் - என்.வி. தேவிபிரசாத், என். ஶ்ரீநிவாசன்


மெலட்டூர் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மர்

பக்தியைப் புகட்டும் ராமாயணம், மகாபாரதம் முதலிய இதிகாச புராணங்கள் அந்தந்த மொழிகளில் உள்ள பெருங்கவிஞர்களால் காப்பியங்களாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவற்றை அனைவரும் புரிந்து கொள்வது கடினம். இக்கதைகளை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் கண்ணுக்கினிய காட்சியாய் வடித்தால் பண்டிதர்கள் பாமரர்கள் என்று அனைவரும் பக்திமான்களாகவும், நீதிமான்களாகவும் ஆவார்கள். அதிலும் இசை, நடனம் இவற்றோடு கூட்டி சிறந்த, எளிய சாகித்தியங்களோடு வழங்கும்போது எல்லோரும் ஆனந்தப் பரவசர்களாகி பக்திமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் ஆவார்கள். 

யக்ஷகானம் குச்சுப்பிடி பாகவத மேளா - பப்பு வேணுகோபால ராவ்

யக்ஷகானம்
யக்ஷகானம் என்ற சொல் ஏறக்குறைய 550 ஆண்டுகளாக புழக்கத்திலிருந்து வருகிறது. இந்த சொல்லினை பல்வேறு எழுத்தாளர்களும், வரலாற்றாசிரியர்களும், விமர்சகர்களும் எடுத்தாண்டு வருகின்றனர். குச்சுப்பிடி நடனத்தை யக்ஷகானம் என எழுத்தாளர்களும் லக்ஷணகாரர்களும் குறிப்பிட்டு வந்துள்ளனர். அதேநேரத்தில் பாகவத மேளாவும் யக்ஷகானமே என கூறுவோரும் உண்டு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் இயற்றிய நாட்டிய நாடகங்களான பிரகலாத பக்தி விஜயம், நௌக சரிதம், ஸ்ரீ சீதாராம விஜயம் ஆகியவற்றை பல அறிஞர்கள் யக்ஷகானம் என வரையறுக்கின்றனர். யக்ஷகானங்களை நூற்றுக்கணக்கில் இயற்றிய அரசர்களும் புலவர்களும் வாழ்ந்த தஞ்சாவூர் நாயக்கர்களின் காலமே இவற்றின் உச்சமாக இருந்திருக்கிறது. ஹரிகதைகளின் பிதாமகரான அஜ்ஜாத ஆதிபட்ல நாராயண தாசர் இயற்றிய ஹரிகதைகளை யக்ஷகானங்கள் என அவராலேயே வரையறுக்கப்படுகின்றன. மேலே கூறிய அனைத்து பாடல்களும் யக்ஷகானம் என்னும் தகுதியை பெறத்தக்கவையா? நாம் யக்ஷகானம் என்னும் சொல்லின் பிறப்பு, அந்த சொல்லின் மூலச்சொல், சுருங்கியும் விரிந்தும் வளர்ந்த அச்சொல்லின் பரிணாமம் ஆகியவற்றை நாம் பார்ப்போம்.

ஊரும் கலையும் - பி.எம். சுந்தரம்

‘பாகவத மேளா’ தஞ்சை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் திருவிழாக்களின் போது நாட்டிய நாடகமாக நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் நிகழ்த்துக்கலை. ‘பாகவதர்’ என்ற சொல்லுக்கு ‘ஶ்ரீ வைஷ்ணவத்தில் விஷ்ணுவின் தொண்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விஷ்ணுவின் பக்தர்’ என பொருள்.

பாகவதராக இருப்பதற்கு அந்தணர்குலத்தில் பிறக்க வேண்டும் என்று அவசியமில்லை. ‘சூத்திரஸ்ச பகவத்பக்த விப்ர பாகவத ஸ்ம்ருத:’ என்ற வாக்கியம் இதனை உறுதி செய்கிறது. பொ.யு. 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த, தெலுங்குமொழியில் வசனமரபின் முன்னோடி, இசைக்கலைஞர் சதுர்லக்ஷம் கிருஷ்ணமாச்சார்யார் ‘ஏ வரமைனேனி?’ (எந்த வர்ணத்திலிருந்தால் என்ன?) என கூறுவதின் மூலம் இதனை அறியலாம். அவர் போதகமூரில் பிறந்த நாராயணய்யா, சென்னமய்யங்கார் மற்றும் பிற குலங்களில் பிறந்த அனைத்து பாகவதர்களையும் “போதகமூரி பாகவதுலு (போதகமூரை சேர்ந்த பாகவதர்கள்) என்றே பொதுவாக அழைக்கிறார்.

பாகவத மேளா முன்னோடிகளும் சங்கமும் - முரளி ரங்கராஜன்

கவிகுல திலகம் மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி

மெலட்டூரில் ‘பாகவத மேளா’ மீட்டுருவாக்கம் ஏற்பட்டு தொடர்ச்சியாக நடைபெற பலர் உழைத்திருக்கிறார்கள். இந்த பழைய கலைவடிவம் உள்ளூர் ஆர்வலர்களால் மீட்டெடுக்கப்பட்டு தனது தனித்தன்மையால் பல கலைஞர்களை ஈர்த்து வந்துள்ளது. தஞ்சைப்பகுதியின் இசை விற்பன்னர்களும், புகழ்பெற்ற நட்டுவனார்களும் இக்கலை வடிவத்தை தங்களுடைய பங்களிப்பால் மேலும் செறிவாக்கியிருக்கிறார்கள். நடேச அய்யர் துவங்கி ஆறு முன்னோடிகளை கட்டுரையின் முதற்பகுதி அறிமுகப்படுத்துகின்றது. நடைமுறை சிக்கல்களை தாண்டி தொடர்ந்து இதை நிகழ்த்த பாகவதமேளா சங்கமாக பதிவு செய்யப்பட்டதையும், அதில் ஏற்பட்ட மாற்றங்களையும் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் காணலாம்.

பிரஹலாத சரிதம் - கவி மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி

3ருவு – 26

பூர்வீகல்யாணி ராக3மு 

மிஶ்ரதாளமு


பல்லவி


தே3வதே3வ இதே3 ஸமயமய்யா – யீ ஸ்தம்ப4முன

ஆவஹிஞ்சி நன்னு ப்3ரோவுமய்யா 


தேவர்க்குத் தேவனே! தருணமிது அய்யனே! இத்தூணினுள்ளே

தோன்றிட வேண்டுமே! எனைக் காத்திட வேண்டுமே அய்யனே! 

మెలట్టూరు భాగవతమేళా మరియు ప్రహ్లాదచరిత్రము - డా. ఎన్.వి. దేవీప్రసాద్, విద్వాన్ ఎన్.శ్రీనివాసన్

భక్తిని బోధించే రామాయణం, భారతం, శ్రీమద్భాగవతం మొదలైన ఇతిహాస పురాణాలు ఆయా భాషల్లో మహాకవులచే కావ్యరూపంలో అనువదించబడినవి. వాటిని అందరూ అర్ధం చేసుకోవడం కష్టం. కథలను సామాన్య జనులకు కూడా అర్థమయ్యేలా సులభమైన శైలిలో దృశ్యంగా మలిస్తే పండిత పామరజనులందరూ భక్తిమంతులుగానూ, నీతిమంతులుగానూ అవుతారు. అందులోనూ సంగీత, నాట్యాలతో మేళవించి చక్కని సులభమైన సాహిత్యంతో అందిస్తే సర్వజనులూ ఆనందంతో పరవశులౌతూ భక్తిమార్గమందు ఆసక్తులౌతారు.

ఈ విధమైన లక్ష్యంతో రూపొందిన సాహిత్య సంగీత నాట్యముల మేళవింపు భాగవతమేళముగా ప్రసిద్ధి చెందింది. భగవద్భక్తిని ఏర్పరచే నాట్య, సంగీత ప్రక్రియ కాబట్టి దీనికి భాగవతమేళం అనీ, వీటిల్ని ప్రదర్శించే వారికి భాగవతులనీ పేరు. ఇవి ముఖ్యంగా దేవాలయాల్లో ప్రదర్శింపబడేవి. భాగవతమేళ నాట్యనాటకములు పండిత పామర భేదం లేకుండా సర్వజనులకీ భక్తిరసాస్వాదం కలిగించి దైవ చింతనను పెంపొందించేవి. ఇక్కడ రూపకము అనే అర్థంలో నాటకము అనే పదం వాడుకలోకి వచ్చింది.

ప్రహ్లాద చరిత్రము - కవికులతిలకం మెలట్టూరు వెంకటరామ శాస్త్రిగారు

దరువు - 26

పూర్వీకల్యాణి రాగము

మిశ్రతాళము

పల్లవి


దేవదేవ యిదే సమయమయ్యా - యీ స్తంభమున

ఆవహించి నన్ను బ్రోవుమయ్యా 


అనుపల్లవి


వేవేగమె కరుణజూడ వెడలుము కడువడిని యిపుడు ॥దేవ॥

 

చరణము


మ్రొక్కి నిన్ను శరణు జెంది నయ్యా

జడియకుమని గ్రక్కున నను గారవింపవయ్యా

రక్కసుడిటు నన్ను చాల కక్కసింప దలచెనయ్యా ॥దేవ॥

 

బూని నిన్ను దనుజుడడిగెనయ్యా

అణురేణు పూర్ణుడనుచు దెలిపియున్నానయ్యా

నే నాడిన మాటలెల్ల నిజము సేయ యిదిగో వేళ ॥దేవ॥

 

నీదు మహిమ తెలియనేరడయ్యా - రక్కసుడు

నిన్ను తనకు జూపమన్నాడయ్యా - యీ దనుజుని

తోను నేను యిట్లు పంతగించినాను ॥దేవ॥

 

భక్తుల కులదైవము నీవయ్యా - దీనులకు

పెద్ద ధనము నీవే గదవయ్యా

చిత్తము తళ్ళాడెనయ్యా శీఘ్రముగన్ రావలెయ్యా ॥దేవ॥

 

తల్లితండ్రి గురువు నీవయ్యా-నిజముగాను

తనకు తాపు ప్రాపు నీవయ్యా

అల కరిని గాచునటులే అమరగ నన్నాదరింప ॥దేవ॥


నా మొఱలకించి గావవయ్యా - శ్రీహరి

నిన్ను నమ్మితినిక చెయి విడువకు మయ్యా

తామసమిపుడేల అచ్యుతాబ్ధినిలయుడైన వరదా! ॥దేవ॥