![]() |
| யோ. ஞான சந்திர ஜாண்சன் |
யோ. ஞான சந்திர ஜாண்சன் தமிழ் ஆய்வாளர். தமிழ் கிறிஸ்தவ இலக்கிய ஆய்வு முன்னோடிகளில் ஒருவர். தமிழ் கிறிஸ்தவ காப்பியங்கள், கிறிஸ்தவ சிற்றிலக்கியங்கள், கிறிஸ்தவ கீர்த்தனைகள் இவற்றை தொகுத்துள்ளார். அச்சேறாத படைப்புகளை பதிப்பித்தல், மீள்பதிப்பு, தொகுப்புப்பணிகள், மொழிபெயர்ப்பு, உரை என்று பல்வேறு தளங்களில் முப்பது ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வேதநாயகம் சாஸ்திரிகள், கால்டுவெல் போன்ற இறைத்தொண்டர்களது வாழ்க்கை வரலாறு குறித்தும் ஆய்வுநூல்களை வெளியிட்டுள்ளார்.
யோ. ஞான சந்திர ஜாண்சன் குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர். சென்னை கிறிஸ்தவக்கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். தந்தை யோவான், தாயார் பரமாயி, மனைவி ஷீபா நேசகுமாரி பள்ளி ஆசிரியை, மகள் கீர்த்தனா கேலப், மகன் இம்மானுவேல் ஜாண்சன்.








