Saturday 8 June 2024

தன்னிச்சைத்தன்மைதான் சாக்கியார்கூத்தின் இலக்கணம் - கலாமண்டலம் ஈஸ்வர உண்ணி நேர்காணல் - பகுதி 2

கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி - விதூஷகன் வேடத்தில்

சாக்கியார்கூத்து” இந்து புராண இதிகாசங்களை பகடியாகவும் விமர்சனத்தன்மையுடன் அணுகக்கூடிய கதைசொல்லல் வடிவம். அதில் சமகால சமூக விமர்சனமும் உண்டு. இந்தியாவில் பலவகையான மரபான கதைசொல்லல் வடிவங்களில் இது தனித்தன்மையானது.

கலாமண்டலம் ஈஸ்வரன் உண்ணி ‘மிழாவு’ இசைக்கலைஞர். புராண இதிகாசங்களுடன் சமகால சமூக விமர்சனமும் கலந்த ‘சாக்கியார் கூத்து’ என்ற கதைசொல்லல் வடிவத்தை நிகழ்த்தக்கூடிய கலைஞர். ஈஸ்வரன் உண்ணி 1959ல் ஆண்டு பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரத்தில் பிறந்தார். தாய் மண்ணம்பட்ட பார்த்தல வாரியத்து சின்னம்மு வார்யஸ்யார். தந்தை பச்சையில் வாரியத் கிருஷ்ணன் வாரியார். 13 வயது வரை பள்ளிக்கல்வி கற்றார். அந்த கல்வியை நிறுத்திவிட்டு ஷொர்ணூரில் உள்ள கேரள கலாமண்டலத்தில் சேர்ந்தார். மிழாவுக்கான ஐந்து வருட கல்வி கற்ற பின்னர், மத்திய அரசின் உதவித்தொகையில் மேலும் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கலாமண்டலத்தில் பயின்றார். மொத்தம் கலாமண்டலத்தில் இருந்த 8 ஆண்டுகளில் கூடியாட்டத்திற்கான மிழா இசைபோக சாக்கியார் கூத்து, பாடகம் போன்ற கதைசொல்லல் சார்ந்த கலைவடிவங்களையும் கற்றுக்கொண்டார். மனைவி ஷோபா, இரண்டு மகள்கள். தற்போது ஷொர்ணூரில் வசிக்கிறார்.

சாக்கியார் கூத்து: ஓர் அறிமுகம், அழகிய மணவாளன்

சாக்கியார் கூத்து

கேரளத்தில் ”சாக்கியார்க்கு எந்தும் ஆவாம் (சாக்கியார் எதையும் செய்யலாம்)” என்ற பழமொழி உண்டு. அந்த பழமொழியில் சுட்டப்படும் ‘சாக்கியார்’ என்பவர் ’சாக்கியார்கூத்து’ என்ற மரபான கதைசொல்லல் வடிவத்தை நிகழ்த்தக்கூடியவர். அந்த கதைசொல்லலில் புராண இதிகாச கதாப்பாத்திரங்களை பகடி செய்யவும், அது வழியாக சமகால சமூகத்தையும், சமகால மனிதர்களையும் பகடி செய்யவும், விமர்சிக்கவும் அவருக்கு முழு சுதந்தரமும் உண்டு என்பதைத்தான் அந்த பழமொழி சுட்டுகிறது. காலப்போக்கில் சாக்கியார்கூத்துடன் எந்த தொடர்பும் இல்லாத, ஆனால் கூர்மையான, எந்த தயக்கமும் இல்லாத விமர்சனத்தன்மையும், அதை வெளிப்படுத்தும் ஆற்றலும், அங்கத நோக்கும்கொண்ட (சிலசமயம் எல்லைமீறும்) தனிநபர்களை ’சாக்கியார்’ என்று சொல்ல ஆரம்பித்தனர்.

தமிழ்நாட்டின் நட்சத்திர-அரசியல்வாதிகள்: தோற்றமும் வளர்ச்சியும் - சு. தியடோர் பாஸ்கரன்

அறிமுகம்

தமிழ்நாட்டில் அரசியலோ சினிமாவோ பேசப்படாமல் ஒருநாளும் கடந்து செல்வதில்லை. வீடுகள் முதல் பொதுவெளி வரை எங்கும் நிறைந்திருக்கும் பேசுபொருள் அது, ஆனால் இரண்டை குறித்தும் நம்மவர்கள் கொண்டிருக்கும் அடிப்படையான வரலாற்று சித்திரம் என்பது திகைப்பூட்டும் அளவுக்கு சூன்யமாக இருக்கும். சிலர் தங்கள் இளமைக்கால நினைவேக்கமாக அவர்களுக்கு தெரிந்த சினிமா செய்திகளை சொல்வதுண்டு, அரசியலை பொறுத்தவரை அதுவும் கிடையாது. இரண்டிலுமே தற்கால ஊடக பெருக்கத்தில் ஒருவாரத்திற்குமேல் எந்தத் தகவலும் நீடிப்பதில்லை. இந்நிலையில் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இக்கட்டுரை தமிழ் சினிமா குறித்த சிறு வரலாற்று சித்திரத்தை அளித்து அது அரசியலுடன் இணையும் புள்ளியை மட்டும் பேசுகிறது. இந்தக் கோணத்தில் பிரிட்டிஷ் காலம் முதல் இன்றுவரையிலான தமிழ் சினிமா, அரசியலின் நடைமுறை சார்ந்து நாம் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். 

பௌத்த வினாவல் - 2, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

பகுதி இரண்டு - தர்மம் அல்லது கோட்பாடு

தர்மச்சக்கரம், தாய்லாந்து, 8-ஆம் நூற்றாண்டு

 104. புத்தர் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

அகவிழிப்படைந்தவர் அல்லது முழுமையான ஞானத்தை அடைந்தவர்.


105. இவருக்கு முன்பும் வேறு புத்தர்கள் இருந்தனர் என நீங்கள் குறிப்பிட்டீர்களே?


ஆம். முடிவில்லா காரணகாரிய சுழற்சியில், அறியாமையால் மனிதகுலம் பெரும்துயரில் மூழ்கி அவதியுருகையில் அத்துயரிலிருந்து விடுபடும் ஞானத்தை மானுடத்திற்கு கற்பிக்க குறிபிட்ட கால இடைவேளைகளில் ஒரு புத்தர் பிறப்பெடுப்பார் என நாங்கள் நம்புகிறோம்.


106. ஒரு புத்தர் எவ்வாறு உருவாகிறார்?


ஒருவர் தான் வாழும் காலத்தில் பூமியிலுள்ள புத்தர்களில் ஒருவரைக் கண்டு, அவரின் சொற்களை கேட்டு, பின்தொடர்ந்து, எதிர்காலத்தில் தானும் அவ்வாறே வாழ முடிவெடுக்கிறார். அவர் அதற்கு தகுதி பெற்றபின்னர் அவரும் ஒரு புத்தராகி மனிதர்கள் பிறவிச்சுழலின் பாதையிலிருந்து விடுபடும் வழியைகாட்டுவார்.


107. அவர் எவ்வாறு முன்செல்வார்?


அந்த பிறவியிலும் அடுத்து எடுக்கவிருக்கும் எல்லா பிறவியிலும் அவர் தன் ஆசைகளை கட்டுக்குள் வைக்கவும், அனுபவங்களின் மூலம் ஞானம் பெறவும், ஆன்மீகம் மற்றும் உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ளும் செயலில் முழுமையாக ஈடுபடுவார். இப்படி, அவர் பல படிநிலைகளாக அறிவடைந்து, உன்னத குணம் பெற்று, அறத்தில் வலுவடைந்து, இறுதியாக, எண்ணற்ற மறுபிறப்புகளுக்கு பின் அவர் அனைத்தும் அறிந்த, அகவிழிபடைந்த, மனிதகுலத்தின் தலைசிறந்த ஆசிரியராக முழுமைபெறுவார்.

சங்கத் தமிழில் கடவுளர் - மு. சண்முகம் பிள்ளை

இந்திரன்


இந்திரன் வானுலகத் தேவர்களின் அதிபதி. 'துறக்கத்து அமரர் செல்வன்' (பரி.5:69), ’அமரர் செல்வன்’ (பரி.5:51), ’வானத்து வளம்கெழு செல்வன்' (பரி.5:59), 'அருநிலை உயர் தெய்வத்து அணங்கு' (பரி.9:12), ’விண்ணோர் வேள்வி முதல்வன்’ (பரி.5:30), என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவன் வடபால் உயர்ந்தோங்கியுள்ள பெருமலையைக் காவல் புரிபவன் (பரி.9:1-3). நூறு வேள்விகளைப் புரிந்தவன். அதனால் விளைந்த பகைவரை வென்று கொல்லும் வெற்றி படைத்தவன் (முருகு.155-156). ஆயிரம் கண்களை உடையவன் (முருகு155; கலி.105,15; பரி.9-9). பகைவர்களை வருத்தும் இயல்புடைய வச்சிராயுதத்தைக் கையில் ஏந்தியவன் (புறம்.241:3, படி.18:30, கலி.105:15), நெடியோன் என்றும் இவன் குறிக்கப்படுகிறான் (புறம்.241:3). நான்கு கொம்புகள் படைத்த யானையின் பிடரியில் ஏறி நடத்துபவன்.

தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 3: உளவியல் - சமீர் ஒகாஸா

மனம் கூறுகளால் ஆனதா (modular)?

நோம் சாம்ஸ்கி

மனிதர்களால் பல்வேறு அறிதகு பணிகளை (Cognitive tasks) செய்ய முடியும். அப்பணிகள் பெரும்பாலும் குறைந்த பிரக்ஞையுடனேயே செய்யப்படுகின்றன. அறிதகு பணி என சொல்வது குறுக்கெழுத்துப் புதிர்களை தீர்ப்பது போன்ற செயல்கள் மட்டும் அல்ல, சாதாரணமான செயல்களான பாதையை பாதுகாப்பாக கடப்பது, ஒரு பந்தைப் பிடிப்பது, வேறு மனிதர்கள் சொல்வதைப் புரிந்துகொள்வது, முகங்களை அடையாளம் காண்பது போன்ற பலவற்றையும் குறிக்கிறது. இத்தகைய பணிகள் நமக்கு மிகவும் பரிச்சயமானவையாக இருந்தாலும் அவற்றை செய்யும் நம்முடைய திறன் நிஜமாகவே சிறப்பு வாய்ந்ததுதான். இது போன்ற பணிகளை ஒரு சராசரி மனிதர் செய்யும் அளவுக்கு எந்திரமனிதனால் செய்ய இயலாது. எப்படியோ நம்முடைய மூளை அத்தகைய சிக்கலான அறிதகு பணிகளை குறைந்த ஆற்றலைக் கொண்டு நம்மை செய்ய வைக்கிறது. இவற்றை எப்படி செய்ய முடிகிறது என விளக்க முயற்சிப்பதே அறிதகு உளவியல் (அல்லது அறிதல்சார் உளவியல் - cognitive psychology) துறையின் முக்கியமான பகுதி.