Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Saturday, 14 October 2023

அரங்கம் எழுத்தை பன்மடங்கு பெருக்கிக்காட்டும் ஆடி - வெளி ரங்கராஜன் நேர்காணல்

வெளி ரங்கராஜன் எழுத்தாளர், இதழாளர், நாடக விமர்சகர், நாடக இயக்குனர். தமிழில் நவீன நாடகங்கள் உருவாகிவந்தபோது அவற்றிற்காக தனி இதழ் நடத்தியவர் ரங்கராஜன். அவர் நடத்திய ‘நாடக வெளி’ என்னும் இதழின் பெயராலேயே ‘வெளி ரங்கராஜன்’ என்று அடையாளப்படுத்தப்படுபவர். தமிழில் நவீன நாடகங்கள் குறித்த விமர்சனங்கள், வெளித்தெரியாத முக்கியமான படைப்பாளிகள் குறித்த தகவல்கள், உலக நாடகங்களை முன்வைத்த உரையாடல்கள், பல்வேறு மொழிகளிலிருந்து மொழிபெயர்ப்புகள், இலக்கியத்துக்கும் அரங்கத்துக்குமான பரிமாற்றங்கள், நேர்காணல்கள் என பல்வேறு தளங்களில் பங்களிப்பு செய்த, தமிழின் முதல் நாடகத்திற்கான இதழ் ‘நாடக வெளி’. ரங்கராஜன் அரங்க செயல்பாடுகளுடன் நாற்பதாண்டு காலம் தொடர்ந்து பிணைந்திருப்பவர், சென்ற பதினேழு ஆண்டுகளாக நாடக இயக்கங்களும் செய்கிறார். இதுவரை பத்து நாடகங்கள் இயக்கியுள்ளார். தமிழில் நாடக எழுத்து என்னும் வகைமைக்கு இவரது பங்களிப்பாக பல புத்தகங்கள் உண்டு. முதல் நூல் ‘தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை’ 2003-ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் இயக்கிய முதல் நாடகம் அகலிகை 2006- ஆம் ஆண்டு வெளிவந்தது.

ரங்கராஜன் 18.3.1950-ல் ஶ்ரீரங்கத்தில் பிறந்தார். அன்னை ஜெயலக்ஷ்மி, தந்தை ஜெயராமன். ஶ்ரீரங்கம் ஆண்கள் பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்தார். திருச்சி தூய வளனார் (செயின்ட் ஜோசப்) கல்லூரியில் முதுகலை கணித பட்டம் பெற்று சென்னையில் பேங் ஆஃப் பரோடாவில் வங்கிப்பணியில் சேர்ந்தார். மனைவி தேன்மொழி. மகன் அரவிந்தன். ரங்கராஜன் தற்போது சென்னையில் வசிக்கிறார். 

அழகிரிசாமியின் நாடகங்கள் - வெளி ரங்கராஜன்

இலக்கிய வடிவங்களான கதைகள், கவிதைகள்,கட்டுரைகள் ஆகியவற்றில் அழகிரிசாமியின் இலக்கிய ரீதியான பங்களிப்பு இருந்த அளவுக்கு நாடகத்தில் அவருடைய பங்களிப்பு குறைவானதாகவே இருந்தாலும்,எழுதப்படும் நாடகங்கள் குறித்தும்,நிகழ்த்தப்படும் நாடகங்கள் குறித்தும் அவர் தீர்க்கமான கருத்துகள் கொண்டவராகவே இருந்திருக்கிறார். நிகழ்த்தப்படும் நிலையிலேயே நாடகம் முழுமையான வடிவம் கொள்கிறது என்றும் படிப்பதற்காக எழுதப்படுபவைகளை வெறும் இலக்கியப் பிரதிகளாகத்தான் கருத முடியுமே தவிர அவற்றை முழுமையான நாடகங்கள் என்று சொல்ல முடியாது என்றும் அழகிரிசாமி கருதினார். அருணாசலக் கவிராயரின் ‘ராமநாடகம்’ பற்றிய மதிப்பீட்டில் கூட அது பாடுவதற்காகவே எழுதப்பட்ட நாடகம் என்றாலும், அந்தப் பாடல்களை பாடும் நிலையிலேயே அவை நாடக வடிவம் கொண்டு நாடக உணர்வுகளை எழுப்புவதைக் குறிப்பிட்டு அவ்வகையில் அது ஒரு சிறப்பான நாடக இலக்கியம் என்கிறார்.

கு.அழகிரிசாமி சிலை, அறச்சலூர் அரசுப்பள்ளி நூலகம்