Showing posts with label குச்சுபிடி. Show all posts
Showing posts with label குச்சுபிடி. Show all posts

Wednesday, 9 July 2025

யக்ஷகானம் குச்சுப்பிடி பாகவத மேளா - பப்பு வேணுகோபால ராவ்

யக்ஷகானம்
யக்ஷகானம் என்ற சொல் ஏறக்குறைய 550 ஆண்டுகளாக புழக்கத்திலிருந்து வருகிறது. இந்த சொல்லினை பல்வேறு எழுத்தாளர்களும், வரலாற்றாசிரியர்களும், விமர்சகர்களும் எடுத்தாண்டு வருகின்றனர். குச்சுப்பிடி நடனத்தை யக்ஷகானம் என எழுத்தாளர்களும் லக்ஷணகாரர்களும் குறிப்பிட்டு வந்துள்ளனர். அதேநேரத்தில் பாகவத மேளாவும் யக்ஷகானமே என கூறுவோரும் உண்டு. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் இயற்றிய நாட்டிய நாடகங்களான பிரகலாத பக்தி விஜயம், நௌக சரிதம், ஸ்ரீ சீதாராம விஜயம் ஆகியவற்றை பல அறிஞர்கள் யக்ஷகானம் என வரையறுக்கின்றனர். யக்ஷகானங்களை நூற்றுக்கணக்கில் இயற்றிய அரசர்களும் புலவர்களும் வாழ்ந்த தஞ்சாவூர் நாயக்கர்களின் காலமே இவற்றின் உச்சமாக இருந்திருக்கிறது. ஹரிகதைகளின் பிதாமகரான அஜ்ஜாத ஆதிபட்ல நாராயண தாசர் இயற்றிய ஹரிகதைகளை யக்ஷகானங்கள் என அவராலேயே வரையறுக்கப்படுகின்றன. மேலே கூறிய அனைத்து பாடல்களும் யக்ஷகானம் என்னும் தகுதியை பெறத்தக்கவையா? நாம் யக்ஷகானம் என்னும் சொல்லின் பிறப்பு, அந்த சொல்லின் மூலச்சொல், சுருங்கியும் விரிந்தும் வளர்ந்த அச்சொல்லின் பரிணாமம் ஆகியவற்றை நாம் பார்ப்போம்.