V. Vedachalam is a prominent Tamil archaeologist. His studies are multifaceted. His very first work on the Thiruvellarai Temple itself serves as a prime example for temple studies. His research on Jainism provided crucial evidence that Jainism flourished in the Pandya dynasty until the fourteenth century. He has also authored books on the worship of ‘Thavvai’ (Jyeshta Devi) and ‘Yakshi’, and on the ‘Shanmata’. Additionally, he has researched the ‘Vanathirayars’, a lineage of minor kings.
Monday, 11 August 2025
Friday, 8 August 2025
ஆய்வாளனின் நிமிர்வும் ஆய்வில் ஒரு மூலப்பொருள்தான் - வெ. வேதாசலம் நேர்காணல்
![]() |
| வெ. வேதாசலம் |
பௌத்தத்தில் இயக்கி - வெ. வேதாசலம்
| யட்சி (சாஞ்சி) |
சமூகங்கள் கூறும் இரண்டாம் வரலாறு - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்
1
சோழர்கள் வரலாறு எழுதிய கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியே தமிழக வரலாற்று எழுத்தின் முன்னோடி. அவரே தமிழ் வரலாற்று ஆய்வுக்கான அடிப்படையை அமைத்து தந்தவர்.
நீலகண்ட சாஸ்திரியின் ‘சோழர்கள்’ நூலின் முதல் பதிப்பு வெளிவந்து ஆறு தலைமுறைகளைக் கடந்த பின்பும் இன்றளவும் சோழப் பேரரசு பற்றி முதன்மையான நூலாகக் கருதப்படுவதற்கு நீலகண்ட சாஸ்திரியின் தெளிந்த ஆய்வு முறைமையே காரணம் என ஆய்வாளர் எ. சுப்பராயலு தன் நூலில் (South India Under the Cholas) குறிப்பிடுகிறார். சோழர் கால கல்வெட்டுகள் பற்றிய நீலகண்ட சாஸ்திரியின் புலமை அவர் எழுதிய வரலாற்றையே மறுக்கமுடியாததாகவும், இன்றளவும் அடிப்படை ஆதாரமாகவும் கொண்டு அதன் மேல் அடுத்தக்கட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன என்கிறார் சுப்பராயலு.
வரலாற்றில் வாணர்கள் - தாமரைக்கண்ணன் அவிநாசி
![]() |
| வில்லிபுத்தூர் ஆண்டாள் விமானம் |
சிற்றரச குலங்களை விடுத்து தமிழக வரலாற்றை எழுதமுடியாது. சோழர், பாண்டியர், விஜயநகர அரசர்களின் முக்கிய அதிகாரிகளாக சிற்றரச குலத்தவர் இருந்துள்ளனர். பேரரசுகளின் கீழ் குறிப்பிட்ட பகுதிகளை ஆட்சிசெய்துள்ளனர். பேரரசர்களுக்கு போர்களில் உதவி செய்யுமளவிற்கு சிலர் உயர்ந்துள்ளனர். பேரரச வம்சத்துடன் மணவுறவுகள் கொண்டுள்ளனர். சிலசமயம் தங்கள் பகுதிகளில் நேரடியாக ஆட்சி செலுத்தியுள்ளனர். ஆலயங்களில் திருப்பணிகளிலும் சமூகப்பணிகளும் செய்துள்ளனர்.
தமிழக வரலாற்றில் எந்த பேரரசை விடவும் நீண்ட காலம் தொடர்ச்சியாக நிலைத்திருந்த சிற்றரச குலம் வாணர்களுடையது. சங்க பாடல்களான அகநானூறு மற்றும் நற்றிணையில் வாணர் பற்றிய குறிப்புகள் உள்ளன. பொ.யு.17-ஆம் நூற்றாண்டு வரை இவர்கள் ஆட்சி செலுத்தியதற்கான வரலாற்று சான்றுகள் கிடைக்கின்றன. இவர்கள் மாவலி சக்கரவத்தியின் வழிவந்தவர்கள் என கூறிக்கொண்டனர். மாவலி வாணவராயர்கள் என தங்களை அழைத்துக்கொண்டனர். இவர்கள் தமிழகம் முழுவதும் சிதறி இருந்துள்ளனர். சங்கப்பாடல்களிலும் கல்வெட்டுகளிலும் வாணர், பாணர் என குறிப்பிடப்படுகின்றனர். இந்த நீண்ட தொடர்ச்சிக்கு காரணம் அவர்களின் நிர்வாகத்திறனும், வீரமும், எல்லோருக்கும் வளைந்துகொடுத்த பண்பும். இவர்களின் ஆதரவை புறக்கணிக்க இயலாதவாறு பேரரசுகள் இவர்களை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
The Goddess Behind My Door - RM Maheswari
தொன்மங்களின் ஆற்றல் - 4: ஜோசப் கேம்ப்பெல்
முந்தைய பகுதி - தொன்மங்களின் ஆற்றல் - 3: ஜோசப் கேம்ப்பெல்
மோயர்ஸ்: தொன்மவியல் என்பது மனிதகுலத்தின் மகத்தான கதையை பற்றிய ஆய்வு என்கிறீர்கள். அந்த மகத்தான கதை என்ன?
கேம்ப்பெல்: நாம் அனைவரும் ஒரே அடிப்படை கொண்டவர்கள், காலத்துடைய களத்தில் வெளிப்பட்டவர்கள். இதுதான் அந்த கதை. காலத்தின் களம் என்பது ஒரு வகையான நிழல்விளையாட்டு, அது காலமற்ற ஒரு தளத்தின் மீது நிகழ்கிறது. நீங்கள் அந்த விளையாட்டை நிழற்களத்தில் ஆடுகிறீர்கள், உங்களால் இயன்ற வரையில் உங்கள் தரப்பை நிகழ்த்துகிறீர்கள். நீங்கள் உங்களை காண்பதன் மறுபக்கம்தான் உங்கள் எதிரி, அதை நீங்கள் நடுநிலையிலிருந்து பார்க்க முடிந்தால் அறிவீர்கள்.
மோயர்ஸ்: ஆகவே அந்த மகத்தான கதையென்பது இந்த நாடகத்தில் நமக்கான இடத்தை கண்டுகொள்வதற்கான தேடல்தானா?
கேம்ப்பெல்: ஆம். ஆனால் அது மட்டுமல்ல. இந்த உலகமெனும் மாபெரும் இசைக்கோர்வையுடன் ஒத்திசைவு கொள்வதற்கான தேடல் மற்றும் நம் உடலின் ஒழுங்கினை அந்த பேரொழுங்குடன் ஒத்திசைய செய்வதற்கான தேடலும்தான்.
டுடன்காமுன் கல்லறை 4: மகத்தான மம்மி அறை - பொன். மகாலிங்கம்
![]() |
| மம்மி அறை உடைத்துத் திறக்கப்பட்டபோது |
முந்தைய பகுதி - டுடன்காமுன் கல்லறை 3: கல்லறை முன்னறைப் பொக்கிஷங்கள்
டுடன்காமுன் கல்லறை கண்டுபிடிக்கப்பட்ட செய்தி ஒரே நாளில் கார்ட்டரை உலகப்புகழ் பெறச் செய்தது. எகிப்திலிருந்த முக்கியப் புள்ளிகள் எல்லாரும் கார்ட்டரை மொய்க்கத் தொடங்கினார்கள். அவர் தங்களோடு வந்து கல்லறையைத் தனிப்பட்ட முறையில் சுற்றிக்காட்ட வேண்டுமென்று அதிகாரிகள் முதல் அயல்நாட்டு அரச குடும்பத்தவர் வரை ஆசைப்பட்டார்கள். ஊடகங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இன்று என்ன கிடைத்தது? இந்த ஒற்றைக் கேள்வியோடு செய்தியாளர்கள் தினமும் துளைத்து எடுத்தனர் கார்ட்டரை. தொடக்கத்தில் முகதாட்சண்யத்துக்காகச் சிலரது ஆசையை நிறைவேற்றி வைத்தார் கார்ட்டர்.
இந்தியக் கவிதையியல் - 6: மெருகேற்றும் காலகட்டம், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா
கி.பி.800 முதல் தொடர்ந்தமைந்த 250 ஆண்டுகளைக் கவிதையியலின் படைப்புக் காலகட்டம் என்று கூறவேண்டும். குறிப்புக்கொள்கை வடிவம் கொண்டு, வெளிச்சத்திற்கு வந்து அதன்மீது எதிர்ப்புகள், மறுப்புகள், விமர்சனங்கள், விளக்கங்கள் எல்லாம் தோன்றி, மாற்றுத்தரப்புகளும் அவ்வப்போது எழுந்து தணிந்துவிட்ட நிலையில் குறிப்புக்கொள்கையே மரபின் அடிப்படையாக நிலைப்பெற்றுவிட்டது. இதுநிகழ இத்தனைக் காலம் வேண்டியிருந்தது. கற்பனையும் நுண்ணுணர்வும் மிக்க இலக்கணவாதிகளிடையே இந்தக் காலகட்டத்தில் எழுந்த அளவிற்கு இதற்கு முன்பும் பின்பும் கருத்து மாறுபாடுகள் கவிதையியலில் ஏற்பட்டிருக்கவில்லை. சுற்றிவந்த கவிதையியல் தேர் தான் நிலைகொள்ள வேண்டிய இடத்திற்கு வருகைதரும் சூழல் பதினோராம் நூற்றாண்டின் இறுதியில் தான் அமைந்தது. எல்லாக் கவிதை அம்சங்களையும் குறிப்புக்கொள்கை நோக்கிலிருந்து முறையாக விளக்கும் பாடநூல் ஒன்றின் தேவையும் எழுந்தது. சுவை, குணம், குற்றம், அணி முதலியவை கவிதையில் பெறும் இடத்தை ஆனந்தவர்தனர் முடிவு செய்திருந்தார். அதேசமயம் இவற்றைக் கவிதையில் நிறுவும் பணியில் அவர் ஈடுபடவில்லை. அவ்வாறு செய்வதற்குத் த்வன்யாலோகக் கட்டமைப்பில் இடமும் இல்லை. சுவை, குணம், குற்றம், அணி இவற்றை கவிதையில் நிறுவும் பணியைச் செய்து முடித்தவர் மம்மடர்.[1]



