அகவும் புறவும் திங்கும்
மஹிமாவார்ன்ன நின்பதம்
புகழ்த்துன்னு ஞங்களங்கு
பகவானெ ஜயிக்குக
அகமும் புறமும் நிறைவது
உன் புகழே
போற்றுகிறோம் உன்னை
இறையே வெற்றி கொள்க!
பாடல் - 6
நீயல்லோ மாயயும் - யதார்த்தத்தில் இல்லாததும் அதே நேரத்தில் இருக்கின்ற ஒன்றாய் தோன்றுவதுமான மாயையும் தெய்வமே
மாயாவியும் - சித்திஜாலங்கள் எல்லாம் சித்தனாகிய யோகியையும், கனவுகளெல்லாம் கனவு காண்பவனையும் சார்ந்தவை. அதுபோலவே, கானல்நீர் போன்ற இந்த உலகமெனும் மாயையும் கற்பனையாய் அதை உருவாக்கிய தெய்வத்திலேயே அடங்கியிருப்பது.
மாயாவிநோதனும் - கனவில் தோன்றும் உலகம் மனதின் கற்பனை மட்டுமே; அந்தக் கனவை உணர்வது அந்த மனதல்லாமல் மற்றொன்றில்லை. அதேபோல், தெய்வத்தின் கருத்தால் உண்டாகியிருக்கின்ற மாயாஜாலங்களைக் கொண்டு நடக்கும் ஆடலில் திளைப்பதும் தெய்வம் மட்டுமே.
நீயல்லோ ஸ்ருஷ்டியும் - இறந்தகாலத்தில் இல்லாமலிருந்தவையும், வெளிப்படாமலிருந்தவையுமான எண்ணற்ற படைப்புகள் நிகழ்காலத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அத்தகைய படைப்பு நீயே
ஸ்ரஷ்டாவாயதும் ஸ்ருஷ்டிஜாலவும் - படைப்பில் எத்தனையோ பன்முகத்தன்மை இருந்தாலும் அவற்றையெல்லாம் படைப்பது தெய்வமே. ஆனால், மண்பாண்டத்திலிருந்து அதை வனைந்த குயவனும், ஆடையிலிருந்து அதை நெய்த நெசவாளியும், ஓவியத்திலிருந்து அதை வரைந்த ஓவியனும் வேறாக உள்ளது போல படைப்பாளியான தெய்வம் படைக்கப்பட்டவற்றிலிருந்து சிறிதும் வேறாக இருப்பதில்லை. படைக்கப்பட்டவை எத்தனையோ அத்தனையிலும் உள்ளுறைவதும், அவற்றை கட்டுப்படுத்துவதும் தெய்வமே
பாடல் - 4
ஆழியும் திரயும் காற்றும் ஆழவும் போலெ: கடலும் அதில் தோன்றி மறையும் அலைகளும், அலைகள் தோன்றக் காரணமாயுள்ள காற்றும், கடலின் அகமாகிய ஆழமும் எவ்வாறானவையோ, அதுபோலவே
ஞங்ஙளும் மாயயும் நின் மஹிமயும் நீயும்: (கடலைப் போன்ற) நாங்களும் (அலையைப் போன்ற) மாயையும் (கடலில் அலைகளை உண்டாக்கும் காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாத) உனது பெருமையும் (கடலின் ஆழத்தினை ஒத்த) நீயும்
என்னுள்ளில் ஆகணம்: ஆகிய பரம்பொருள் எங்களால் அறியப்பட வேண்டும். அதாவது, அனைத்தும் நானென்ற போதம் எங்களுக்கு கைகூட வேண்டும்.
அன்னவஸ்த்ராதி முட்டாதெ
தந்நு ரக்ஷிச்சு ஞங்ஙளெ
தன்யராக்குன்ன நீயொன்னு
தன்னெ ஞங்ஙள்க்கு தம்புரான்
உணவும் உடையும் குறையாது
தந்து எமைக் காத்து
நிறைவடையச் செய்யும் நீயே
எமக்கென்றும் இறை
வாழ்க்கையை தத்துவம், மதம், அறிவியல் என்ற மூன்று கோணங்களிலிருந்து அணுகலாம். முதல் வழி ஊகத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்தனையின் மூலம் மெய்மையை கண்டடைவோருடையது. இரண்டாவது உணர்வுபூர்வமான அனுபவத்திற்கு முதன்மை அளிக்கும் பக்தர்களுடையது. வாழ்வின் புறவயமான அம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வரலாற்றின் கடந்துபோன அத்தியாயங்கள் தரும் செய்தியை மனதில் கொண்டு பரிசோதனைகளையும் ஆய்வுகளையும் பயன்படுத்தி புதிய முடிபுகள் நோக்கி செல்லும் அறிவியலாளரின் வழி மூன்றாவது.