Thursday 14 March 2024

சூழலியல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் முதலில் பல்லுயிர் இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பேசவேண்டும் - ரவீந்திரன் நடராஜன் நேர்காணல்

ரவீந்திரன் நடராஜன்

ரவீந்திரன் நடராஜன் பறவையியலாளர், களச்செயல்பாட்டாளர். 25 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பறவைகள் மீதான ஆர்வத்திலிருந்து, பறவைகளைப் புகைப்படம் எடுப்பது, பறவைகள் பற்றிய ஆய்வுகள் நடத்துவது எனத் தொடர்ந்து இயங்கி வருபவர். பறவையியலை அதிகமானவர்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதற்காக ஒரு வருடத்துக்கு 1500 ஆசிரியர்கள் 10,000 மாணவர்களைப் பயிற்றுவிப்பது என்ற முன்திட்டத்துடன் பயணித்து வருகிறார். பறவைகள் குறித்த தனது அவதானிப்புகளைத் தொடர்ந்து பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளத்திலும் எழுதி வருகிறார். மேலும், Research gate, Journal of threatened taxa போன்ற இதழ்களில் இவரது ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகி உள்ளன. அரிய உயிரினங்களை பதிவுசெய்தல் பறவைகளின் வாழ்வியல் மீதான ஆய்வுகள் இவற்றின் மூலமாக மாநிலத்தின் சில பல்லுயிர் சூழல் மிக்க பகுதிகளை அரசு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க பல சமூக, சூழல் செயல்பாட்டாளர் குழுக்களுடன் இணைந்து பங்காற்றியிருக்கிறார். அதிகமும் ஆய்வுசெய்யப்படாத இடமாகிய இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் வாழ்விடப் பறவைகள், வலசைப் பறவையினங்கள் குறித்த ஆய்வுகள் செய்து முக்கியமான பதிவுகளை ரவீந்திரன் செய்துவருகிறார். பறவைகள் மட்டுமல்லாது வண்ணத்துப்பூச்சிகள், காட்டுயிர்கள் குறித்த இவரது ஆய்வுகளும் முக்கியமானவை. தொடர்ந்து வனத்துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளுக்கு உதவுவதோடு இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தினை நிறுவி அதன் வழியாகவும் இயங்கி வருகிறார். 

என்னை ஈர்க்கும் இந்திய கானுயிர் - மா. கிருஷ்ணன்

ஏன் இந்திய காட்டுயிர் என்னை  ஈர்க்கிறது?  என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், கடந்த முப்பது வருடங்களில் நாடு முழுவதும் நான் காணநேர்ந்த காட்டுயிர், தாவரங்கள் பற்றிய நினைவுகளை மீட்டுக்கொள்கிறேன் என்று சொல்லலாம். இருந்தும் அதிலிருந்து குறிப்பிட்ட ஒன்றை மட்டும் சொல்வது  எளிதல்ல.

ஆடல் - 6: செவ்வேள் ஆடல் - தாமரைக்கண்ணன், புதுச்சேரி

சூரசம்மாரக் கூத்து 

தமிழில் “கூத்து” என்னும் பழைய சொல் வெவ்வேறு பொருள்களில் பயன்படுகிறது. துணங்கை, குரவை, வெறியாடல் முதலிய சங்ககால கூத்துக்கள் வழிபாட்டுச் சடங்கு சார்ந்தும், போர் முதலான சூழல்களை சார்ந்தும், விழாக்காலங்களில் ஆடப்பட்டதாகவும் உள்ளது. இவற்றில் நாடகீயமான பகுதிகள் இருக்கலாம், மீளச்செய்யப்படும் செய்கைகள் இருக்கலாம், வேடிக்கை வினோதம் போன்ற கூறுகளை அடக்கிய பாவங்கள் இருக்கலாம் ஆனால் சங்ககால கூத்து, கதைகூறல் மரபுடன் வலுவாகப்பிணைந்த கலைவடிவம்தான் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. எளியமுறையில் இதை இன்றைய செவ்வியல் கலையான பரதநாட்டியத்துடன் ஒப்பிட்டால், பரதத்தின் பல பகுதிகள் கதைகூற முயல்பவை அல்ல என்பதை காணலாம். தில்லானா, வர்ணம் முதலியவை அபிநயத்தை மிகக்குறைவாக எடுத்துக்கொள்பவை, அதற்கு மாறாக பதம் முழுக்கவே உணர்ச்சிகளையும் கதைகூறலையும் சார்ந்திருக்கின்றது.

கிறிஸ்துவின் சித்திரங்கள் - 4: உலகப்போர்கள் - தாமரைக்கண்ணன் அவிநாசி

The Risen Christ, 1919 - Jacob Epstein

”இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28.20) என உயிர்ந்தெழுந்த கிறிஸ்து தன் சீடர்களுக்கு வாக்களிக்கிறார். இது மனிதர்கள் அனைவருக்குமான வாக்கு. கிறிஸ்துவின் இந்த உடல் கடந்த ஆன்மீக இருப்பையும் அவரின் அருகணைவையும் எப்போதைக்கும் விட உலகப்போர்களிலும் அதில் நிகழ்ந்த இன அழிப்புகளிலும் மனிதர்கள் உணர்ந்தனர். இது கலைகளிலும் வெளிப்பட்டது. நவீனம் மரபான கலை வடிவங்களில் இருந்து விலகி கலைஞர்கள் தங்களுடைய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை அளித்தது. கலைஞர்கள் உலகப்போர்களில் தாங்கள் அடைந்த வலியை, துயரை, போர்கள் மீதான கண்டனத்தை கிறிஸ்து வழியாக வெளிப்படுத்தினர். கண்டனமும் துயரும் மட்டுமல்ல, கலைஞர்கள் தாங்கள் ஆன்மீகமாக கண்டடைந்த தங்களுடைய கிறிஸ்துவை படைத்தனர். 

நாட்டார் மரபில் விஷ்ணு - அ.கா.பெருமாள்


தமிழக நாட்டார் தெய்வங்கள், வழிபாடு, நாட்டார் சடங்குகள் பற்றி ஆராய்ந்தவர்களில் பெரும்பாலோர் இவற்றை சைவச்சார்புடன் தொடர்புபடுத்திப் பேசுவது வழக்கமாக உள்ளது. நாட்டார் தெய்வங்களின் வழிபாட்டு மரபில் சிவன், பார்வதி தொடர்பான கதைகளே அதிகம் உள்ளன. சைவத்தை ஒப்பிடும்போது வைணவம் அல்லது விஷ்ணு தொடர்பான கதைகள், தெய்வங்கள், வழிபாட்டு முறைகள் மிகக் குறைவாகவே கிடைத்துள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இராமாயண, பாரதக் கதைகள் தமிழகத்தில் வழக்கிலிருந்தன. இவை பற்றிய சில சான்றுகள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. இராமாயணத்தின் முழுக்கதையும் அல்லது வான்மீகியின் மூலவடிவமும் சங்க காலத்தில் வந்து சேர்ந்ததா என்பதை சரியாகச் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் சங்கப்பாடல்களில் காணப்படுகின்ற இராமாயணத் துணுக்குகள், வாய்மொழியாகப் பேசப்பட்டவற்றின் அறுபட்ட துண்டுகளும் அல்ல.

தனி-அறிவியல் துறைகளிலுள்ள தத்துவ சிக்கல்கள் - 1: இயற்பியல் - சமீர் ஒகாஸா

இதுவரை நாம் பார்த்த அனுமானம், விளக்கம், ரியலிசம் மற்றும் அறிவியல் மாற்றங்கள் ஆகியவை ‘அறிவியலின் பொது தத்துவங்களை’ சேர்ந்தது. இவை வேதியியல் அல்லது நிலவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளுக்கு மட்டுமல்லாமல் பொதுவாக உள்ள அறிவியல் ஆய்வுகளின் இயல்பு மீது கவனத்தை செலுத்துகின்றன. எனினும் குறிப்பிட்ட துறைகளை சார்ந்த சுவாரஸ்யமான தத்துவார்த்த கேள்விகளும் உள்ளன. அவை ’தனி-அறிவியல்களின் (Special sciences) தத்துவம்’ எனப்படுகின்றன. இக்கேள்விகள் பாதி தத்துவார்த்தமாகவும், பாதி புறவய-உண்மைகளையும் (empirical facts) சார்ந்தது. இதுவே அவற்றை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்குகின்றன. இப்பகுதியில் இதுபோன்ற மூன்று கேள்விகளை ஆராய்ந்து பார்க்கலாம், இயற்பியல், உயிரியல் மற்றும் உளவியல் ஆகிய துறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கேள்வியைப் பார்க்கலாம்.

நியூட்டன் மற்றும் லீப்னிஸ்

Monday 11 March 2024

The skill of the artiste decides the performance, not the character - Sivananda Hegde Interview

Sivananda Hegde

Yakshagana is a unique performance art of Karnataka. It is a combination of music, dance, dialogue, and bright costumes. Troupes have been performing this art for a long time and the events are performed all through the night. This art is popular among the people of Karnataka, especially the villagers from the west coast provide a lot of support. Just like Tamilnadu’s Therukkoothu (pageants or street plays) and Kerala’s Kathakali, Yakshagana was also performed only by men dressed as women. In this century, women are also participating.